27 January 2016

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

கருப்புவில் லோனைக் கூற்றைக்
காய்ந்தவர் கடவூர் மன்னி
விருப்புறும் அன்பு மேன்மேல்
மிக்கெழும் வேட்கை கூர
ஒருப்படும் உள்ளத் தன்மை
உண்மையால் தமக்கு நேர்ந்த
திருப்பணி பலவும் செய்து
சிவபத நிழலில் சேர்ந்தார்.
 
                 -குங்கிலிகலய நாயனார்  (34)

 

பொருள்: கரும்பை வில்லாக உடைய மன்மதனையும் இயமனையும் ஒறுத்த பெருமான் எழுந்தருளியிருக்கும் திருக்கடவூரில் வாழ்ந்து வந்த கலயனார், மிக்கெழுகின்ற காதல் கூர்ந்திட ஒருமைப் பாடுற்ற நிலையில், தமக்குப் பொருந்துவதாய திருப்பணிகள் பலவுஞ் செய்து, சிவபெருமானின் திருவடி நீழலில் சேர்ந்தருளினார்

No comments:

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...