19 January 2016

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

இப்பாடே வந்தியம்பு கூடுபுகல் என்கிளியே
ஒப்பாடாச் சீருடையான் ஊர்வதென்னே எப்போதும்
தேன்புரையுஞ் சிந்தையராய்த் தெய்வப்பெண் ணேத்திசைப்ப
வான்புரவி ஊரும் மகிழ்ந்து.
 
                         -மாணிக்கவாசகர்  (8-19-6)

 

பொருள்: கிளியே! கூடு புகாதே சிறப்பையுடைய பெருமான் ஊர்தியாகக் கொள்வது எது எனில், எக்காலத்தும் தெய்வப் பெண்கள் தேன்போலும் இனிய சிந்தனையை யுடையவராய், துதிபாட மகிழ்ச்சி கொண்டு பெருமையுடைய வேத மாகிய குதிரையை ஏறி அவன் வருவான். இவ்விடத்தே வந்து அதனைச் சொல்வாயாக.

No comments:

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...