12 January 2016

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

நண்ணிய ஒருமை யன்பின்
நாருறு பாசத் தாலே
திண்ணிய தொண்டர் பூட்டி
இளைத்தபின் திறம்பி நிற்க
ஒண்ணுமோ கலய னார்தம்
ஒருப்பாடு கண்ட போதே
அண்ணலார் நேரே நின்றார்
அமரரும் விசும்பில் ஆர்த்தார்.
 
                      -குங்குலிகலய நாயனார்  (28)

 

 பொருள்:  பொருந்திய ஒரு நெறிய மனம் கொண்டு அன்பு என்னும் திண்ணிய நாரால் கழுத்தில் பூட்டி இழுத்து வருத்தமுற்ற பின்னர்,  கலயனாரின் ஒருமை அன்பின் திறத்தைக் கண்ட அமையத்தேயே பெருமான் நேராக நின்றார். தேவர்களும் அது கண்டு மகிழ்வொலி செய்தனர்.

No comments:

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...