09 April 2015

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

வெய்யமா எழுப்பஏவி
வெற்பராயம் ஓடிநேர்
எய்யும்வாளி முன்தெரிந்து
கொண்டுசெல்ல எங்கணும்
மொய்குரல் துடிக்குலங்கள்
பம்பைமுன் சிலைத்தெழக்
கைவிளித் ததிர்த்துமா
எழுப்பினார்கள் கானெலாம்.

                    - கண்ணப்ப நாயனார்  புராணம் (77)

 

பொருள்:  விலங்குகளை எழுப்பும்படி வேடர்களை ஏவ, அம்மலைநாட்டு வேடரெல்லாம் மிருகங்களை எய்வதற்கு ஏற்ற கூரிய அம்புகளை எடுத்துக் கொண்டு, எங்கும் ஓடிச் செல்ல, எப்பக்கங்களிலும் மொய்த்தெழுகின்ற உடுக்கின் கூட்டங்களின் ஓசை பெருக, பம்பைப் பறைமுன் முழங்க, கைகளைத் தட்டி, நிலம் அதிரும் ஓசை செய்து, காட்டிலுள்ள மிருகங்களை யெல்லாம் அவ்வேடர்கள் எழுப்பினார்கள்.

No comments:

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...