23 April 2015

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

நாணனே தோன்றும் குன்றில்
நண்ணுவேம் என்ன நாணன்
காணநீ போதின் நல்ல
காட்சியே காணும் இந்தச்
சேணுயர் திருக்கா ளத்தி
மலைமிசை யெழுந்து செவ்வே
கோணமில் குடுமித் தேவர்
இருப்பர்கும் பிடலாம் என்றான்.
 
                    -கண்ணப்பநாயனார் புரணாம்   (96)

 

பொருள்: நாணனே, இதோ தெரிகின்ற மலைமேல் செல்வோம் என்று கண்ணப்ப நாயனார் கூற , நாணனும், `நீ அம்மலைக்குச் செல்வாயாயின் நல்ல காட்சியையே காண்பாய். வானுயர எழுந்த திருக்காளத்தி மலையின் மேல், எவர்க்கும் அருள் புரிதலில் மாறு படுதல் இல்லாத குடுமித்தேவர் என்னும் பெருமான் இருப்பர். கும்பிடலாம் என்றான்.

No comments:

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...