13 April 2015

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

வானவர் வணங்கி யேத்தி வைகலு மலர்க டூவத்
தானவர்க் கருள்கள் செய்யுஞ் சங்கரன் செங்க ணேற்றன்
தேனமர் பொழில்கள் சூழத் திகழுநெய்த் தான மேய
கூனிள மதியி னானைக் கூடுமா றறிகி லேனே.
 
                  -திருநாவுக்கரசர்  (4-37-6)

 

பொருள்: வானவர்கள் நாடோறும் வணங்கித்துதித்து மலர்களை அருச்சிக்க , அவர்களுக்கு வேண்டியவற்றை வழங்கும் நன்மை செய்பவனாய் , சிவந்த கண்களையுடைய திருமாலாகிய காளையை உடையவனாய் , வண்டுகள் விரும்பித் தங்குகின்ற சோலைகள் நாற் புறமும் சூழ விளங்கும் நெய்த்தானத்தில் விரும்பி உறைகின்ற , வளைந்த பிறை சூடியபெருமானைக் கூடும் திறத்தை அறியாது இருக்கின்றேனே. 

No comments:

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...