05 December 2014

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

வந்தழைத்த மாற்றான்
வயப்புலிப்போத் தன்னார்முன்
நந்தமது வாட்பயிற்று
நற்றாயங் கொள்ளுங்கால்
இந்தவெளி மேற்கை
வகுத்திருவேம் பொருபடையும்
சந்தித் தமர்விளைத்தால்
சாயாதார் கொள்வதென.
 
             - ஏனாதி  நாயனார்  புராணம் (13)

 

பொருள்: தன்னிடத்தில் வந்து போருக்கு அழைத்தவ னாகிய அதிசூரன், வலிமை மிகுந்த ஆண் புலி என நிற்கும் ஏனாதி நாதர் முன்நின்று, நாம் இருவரும், வாள் வித்தை பயிற்றுவித்துவரும் தொழில் உரிமையை நிலைநாட்ட, இந்த வெளியிடத்து அணிவகுத்து நிற்கும் நம் இருவரது படைகளும் தம்முள் பொர, இவர்களில் வெற்றி கொள்வார் யாவரோ, அவரே அத்தொழில் உரிமைக்கு உரியவன் என்றான். 

No comments:

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...