17 December 2014

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

இம்முனைய வெம்போரில்
இருபடையின் வாள்வீரர்
வெம்முனையின் வீடியபின்
வீடாது மிக்கொழிந்த
தம்முடைய பல்படைஞர்
பின்னாகத் தாமுன்பு
தெம்முனையில் ஏனாதி
நாதர் செயிர்த்தெழுந்தார்.
 
                - ஏனாதி நாயனார் புராணம் (25)

 

பொருள்: இவ்வாறு நிகழ்ந்த கொடிய போரில் இருசாரார் பக்கத்தும், வீரம் மிக்க மறவர்கள் கொடும் போர் செய்து பலர் இறந்தனர். இறவாது எஞ்சி நின்ற தம் படைவீரர்கள் பின்வர, தாம் முன்பு சென்று போர் செய்வாராகிய ஏனாதிநாதர் சினந்து எழுந்தனர்

No comments:

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...