18 December 2014

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

புனைதல் புரிபுன் சடைதன்மேல்
கனைதல் லொருகங் கைகரந்தான்
வினையில் லவர்வீ ழிம்மிழலை
நினைவில் லவர்நெஞ் சமுநெஞ்சே.
 
                   - திருஞானசம்பந்தர் (1-35-2)
 
பொருள்: மலரால் அலங்கரிக்கப்பட்ட சிவந்த சடைமுடி மீது ஆரவாரித்து வந்த ஒப்பற்ற கங்கை நதியை மறைத்து வைத்துள்ள சிவபிரான் உறையும், தீவினை இல்லாத மக்கள் வாழும் திருவீழிமிழலையை நினையாதவர் நெஞ்சம்  ஒரு நெஞ்சம் ஆகா! 

No comments:

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...