01 December 2014

தினம் ஒரு திருமுறை

தினம்  ஒரு திருமுறை

குலம்பாடிக் கொக்கிற
கும்பாடிக் கோல்வளையாள்
நலம்பாடி நஞ்சுண்ட
வாபாடி நாள்தோறும்
அலம்பார் புனல்தில்லை
அம்பலத்தே ஆடுகின்ற
சிலம்பாடல் பாடிநாம்
தெள்ளேணங் கொட்டாமோ.
 
                    - மாணிக்கவாசகர் (8-11-20)

 

பொருள்: இறைவனது மேன்மையையும் குதிரைச் சேவகனாய் வந்த சிறப்பையும் உமாதேவியினது நன்மையையும் பாடி, இறைவன் நஞ்சுண்ட செய்தியைப் பாடி, தில்லையம்பலத்தில் நடிக்கின்ற திருவடிச்சிலம்பினது வெற்றியைப் பாடி நாம் தெள்ளேணம் கொட்டுவோம்.

No comments:

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...