09 October 2014

தினம் ஒரு திருமுறை


தினம் ஒரு திருமுறை

இருவரும் எழுந்து வானில்
எழுந்தபே ரொலியைப் போற்ற
அருமறைப் பொருளாய் உள்ளார்
அணிகொள்பூங் கூடை தன்னில்
மருவிய பள்ளித் தாம
நிறைந்திட அருள மற்றத்
திருவருள் கண்டு வாழ்ந்து
சிவகாமியாரும் நின்றார்.
 
                      - எறிபத்தநாயனார் புராணம் (50)

 

பொருள்: எறிபத்த நாயனாரும், புகழ்ச்சோழ நாயனாரும் ஒருவரை ஒருவர் வணங்கி, எழுந்து நின்று, வானொலியைப் போற்ற, அரிய மறைப் பொருளாயுள்ள சிவபெருமானும், அழகிய திருப்பூங்கூடையில் முன்பிருந்த திருப்பள்ளித் தாமத்திற்குரிய மலர்கள் நிறையும்படி அருளிச் செய்ய, அத்தகைய திருவருளைக் கண்டு மகிழ்ந்து, சிவகாமி யாண்டாரும் அங்கு வந்து நின்றனர்.

No comments:

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...