தினம் ஒரு திருமுறை
சதுர்முகன் றானுமாலுந் தம்மிலே யிகலக் கண்டு
எதிர்முக மின்றி நின்ற வெரியுரு வதனை வைத்தார்
பிதிர்முகன் காலன்றன்னைக் காறனிற் பிதிரவைத்தார்
கதிர்முகஞ் சடையில்வைத்தார் கழிப்பாலைச் சேர்ப்பனாரே.
எதிர்முக மின்றி நின்ற வெரியுரு வதனை வைத்தார்
பிதிர்முகன் காலன்றன்னைக் காறனிற் பிதிரவைத்தார்
கதிர்முகஞ் சடையில்வைத்தார் கழிப்பாலைச் சேர்ப்பனாரே.
- திருநாவுக்கரசர் (4-30-9)
பொருள்: பிரமனும் திருமாலும் தம் இருவருள் பரம்பொருள் யாவர் என்று மாறுபடுதலைக் கண்டு , கண்கூடாக ஆதியும் அந்தமும் காணமுடியாத தீத்தம்பத்தைப் படைத்தார் . கடுமையான முகத்தை உடைய கூற்றுவனைக் காலினால் சிதறவைத்தார் . பிறையைச் சடையில் வைத்தவருமான கழிப்பாலைச் இறைவனார்.
No comments:
Post a Comment