21 October 2014

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

மற்றவர் இனைய தான
வன்பெருந் தொண்டு மண்மேல்
உற்றிடத் தடியார் முன்சென்
றுதவியே நாளும் நாளும்
நற்றவக் கொள்கை தாங்கி
நலமிகு கயிலை வெற்பில்
கொற்றவர் கணத்தின் முன்னாம்
கோமுதல் தலைமை பெற்றார்.
 
              - எரிபத்தனாயனார் புரணாம் 

 

பொருள்: எறிபத்த நாயனார், மேற்கூறிய முறையான வலிய பெருந்தொண்டை நாளும் இந் நிலவுலகத்தின்கண் அடியவர் களுக்குத் துன்பம் நேரிட்ட பொழுது அவர் முன் சென்று அத்துன் பத்தை நீக்கி, நாளும் நல்ல தவநெறியைப் பூண்டு, பின்பு மேன்மை மிக்க திருக்கயிலையில் வெற்றி பொருந்திய சிவகணங்கட்க்கு முன்னாக இருக்கும் முதன்மை பெற்றார்.

No comments:

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...