28 October 2014

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

அருமந்த தேவர்
அயன்திருமாற் கரியசிவம்
உருவந்து பூதலத்தோர்
உகப்பெய்தக் கொண்டருளிக்
கருவெந்து வீழக்
கடைக்கணித்தென் உளம்புகுந்த
திருவந்த வாபாடித்
தெள்ளேணங் கொட்டாமோ.
 
                     - மாணிக்கவாசகர் (8-11-5)

 

 பொருள்: திருமால், பிரமன் என்னும் அருமையாகிய தேவர்களுக்கும் அருகிய  சிவம் உலகத்துள்ளோர் வியப் படையும் வண்ணம் மானுடவுருவமாய் எழுந்தருளி என்னை அடிமை கொண்டு என்பிறவிக் காடுவெந்து நீறாகும்படி கடைக்கணித்து என் மனம் புகுந்ததனால் எனக்குளதாகிய பெருஞ்செல்வத்தைப் புகழ்ந்து பாடித் தெள்ளேணம் கொட்டுவோம்.

No comments:

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...