24 September 2014

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை


புரிந்தவர் கொடுத்த வாளை
அன்பர்தங் கழுத்தில் பூட்டி
அரிந்திட லுற்ற போதில்
அரசனும் பெரியோர் செய்கை
இருந்தவா றிதுவென் கெட்டேன்
என்றெதிர் கடிதிற் சென்று
பெருந்தடந் தோளாற் கூடிப்
பிடித்தனன் வாளுங் கையும்.

           - எரிபத்தநாயனார் புராணம் (46)

பொருள்: புகழ்ச் சோழ நாயனார் விரும்பிக் கொடுத்த உடைவாளை எறிபத்த நாயனார், தம் கழுத்தில் சேர்த்து அறுக்கத் தொடங்கும் பொழுது, புகழ்ச் சோழநாயனாரும், இப் பெரியவரின் செய்கை இவ்வாறிருக்க யானே கெட்டேன் என்று கூறி, இரங்கி, அவர் எதிரே விரைந்து போய்த் தம் பெரிய கைகளினால் அவர் தம் வாளையையும், கையையும் தடுத்துப் பிடித்தார்.

No comments:

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...