04 September 2014

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

நொய்யவர் விழுமி யாரு நூலினுண் ணெறியைக் காட்டும்
மெய்யவர் பொய்யு மில்லார் உடலெனு மிடிஞ்சி றன்னில்
நெய்யமர் திரியு மாகி நெஞ்சத்துள் விளக்கு மாகிச்
செய்யவர் கரிய கண்டர் திருச்செம்பொன் பள்ளி யாரே.
 
                - திருநாவுக்கரசர் (4-29-2)

 

பொருள்: செம்பொன்பள்ளியார் ஞானவடிவினர் ஆதலின் நொய்யராய் , சீர்மை உடையவராய் , வேதநெறியைக் காட்டும் உண்மை வடிவினராய் , பொய்யிலியாய் , உடல் என்னும் ஓட்டாஞ் சில்லியிலே நெய்யில் தோய்த்த திரியாகவும் நெஞ்சில் ஒளி தருகின்ற விளக்காகவும் உள்ள செந்நிறத்தவராவர் .

No comments:

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...