05 September 2014

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

ஆர்த்தாய் ஆடரவை அரை
ஆர்பு லியதள்மேற்
போர்த்தாய் யானையின்தோல் உரி
வைபு லால்நாறக்
காத்தாய் தொண்டுசெய்வார் வினை
கள்ள வைபோகப்
பார்த்தாய் நுற்கிடமாம் பழி
யில்கழிப் பாலையதே.
 
                   - சுந்தரர் (7-23-6)
 
பொருள்: அரையின்கண் பொருந்திய புலித்தோலின்மேல் , ஆடுகின்ற பாம்பைக் கட்டியவனே , யானையின் உரிக்கப்பட்டதாகிய தோலைப் புலால் நாற்றம் வீசும்படி போர்த்துக்கொண்டவனே , உனக்குத் தொண்டு செய்வாரது வினைகள் நீங்கும்படி திருக்கண் நோக்கம் வைத்து அவர்களைக் காத்தருளினவனே , உனக்கு இடமாவது திருக்கழிப்பாலையே

No comments:

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...