05 November 2018

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை


புல்லறிவிற் சமணர்க்காப்
பொல்லாங்கு புரிந்தொழுகும்
பல்லவனுந் தன்னுடைய
பழவினைப்பா சம்பறிய
அல்லல்ஒழிந் தங்கெய்தி
ஆண்டஅர சினைப்பணிந்து
வல்அமணர் தமைநீத்து
மழவிடையோன் தாளடைந்தான்.

               -திருநாவுக்கரசர் புராணம்  (145)


பொருள்: புல்லிய அறிவையுடைய சமணர்களுக்காகப் பெரும் தீங்குகளையே இடைவிடாது செய்துவருபவனாகிய மகேந்திர வர்மனாகிய பல்லவ மன்னனும், தன் பழவினைத் தொடர்பு நீங்கவே, அத்துன்பத்தினின்றும் நீங்கித் திருவதிகையை அடைந்து, ஆளுடைய அரசரை வணங்கி, வலியச் சமணர்களை விட்டு இளைய ஆனேற்றை யுடைய சிவபெருமானின் திருவடிகளைச் சாரும் நெறியாகிய சைவப் பெருநெறியைச் சேர்ந்தான்

No comments:

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...