12 November 2018

தினம் ஒரு திருமுறை


தினம் ஒரு திருமுறை


சுடுவார்பொடி நீறுந்நல
துண்டப்பிறை கீளும்
கடமார்களி யானையுரி
யணிந்தகறைக் கண்டன்
படவேரிடை மடவாளொடு
பாலாவியின் கரைமேல்
திடமாஉறை கின்றான்திருக்
கேதீச்சரத் தானே

         - (சுந்தரர் 7-80-2)


பொருள்: சுடப்பட்ட நுண்ணிய பொடியாகிய நீற்றையும் , நல்ல பிளவாகிய பிறையையும் , கீளினையும் , மதம் நிறைந்த மயக்கத்தையுடைய , யானையினது தோலையும் அணிந்த கறுத்த கண்டத்தை உடையவனாகிய , திருக்கேதீச்சரத்தில் எழுந்தருளியுள்ள பெருமான் , பாலாவி யாற்றின் கரைமேல் , பாம்பு போலும் இடை யினையுடைய மங்கை ஒருத்தியோடு நிலையாக வாழ்பவனாய்க் காணப்படுகின்றான் .

No comments:

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...