15 November 2018

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை


நீடுதிருத் தூங்கானை
மாடத்து நிலவுகின்ற
ஆடகமே ருச்சிலையான்
அருளாலோர் சிவபூதம்
மாடொருவர் அறியாமே
வாகீசர் திருத்தோளில்
சேடுயர்மூ விலைச்சூலம்
சினவிடையி னுடன்சாத்த.

           -திருநாவுக்கரசர் புராணம்  (152)


பொருள்: செல்வம் நிலைபெறும் திருத்தூங்கானை மாடத்தில் நிலவும் பொன்னான மேருமலையை வில்லாக உடைய பெருமானின் திருவருளால், ஒரு சிவ பூதமானது, அருகிலுள்ளார் யாரும் அறியாதவாறு வந்து, திருநாவுக்கரசரின் திருத்தோள்களில் ஒளி மிக்க மூவிலைச்சூலக் குறியைச் சினமுடைய ஆனேற்றின் குறியுடனே சாத்த,

No comments:

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...