05 November 2015

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

கங்கைநீர் கலிக்கும் சென்னிக்
கண்ணுதல் எம்பி ராற்குப்
பொங்குகுங் குலியத் தூபம்
பொலிவுறப் போற்றிச் செல்ல
அங்கவ ரருளி னாலே
வறுமைவந் தடைந்த பின்னும்
தங்கள்நா யகர்க்குத் தாமுன்
செய்பணி தவாமை யுய்த்தார்.
 
                     - குங்கிளிகலயனாயனார் (7)

 

பொருள்: கங்கையாறு ஒலிக்கும் சடையுடன், நெற்றியில் கண்ணும் கொண்ட பெருமானுக்கு, மேன்மேலும் நறுமணம் சிறக்கும் குங்குலிய மணம் கமழ்ந்து பொலிவுறும்படி, நாள்தோறும் பணிசெய்து வரும் அவருக்கு, பெருமானார் திருவருளினாலே அங்கு வறுமை வந்து அடைய, அதன்பின்பும் தம் தலைவராய பெருமானுக்குத் தாம் முன்பிருந்து செய்துவரும் குங்குலியத் தூபம் இடும் பணியைத் தவறாமல் செய்து வந்தார்

No comments:

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...