18 November 2015

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

கீதம் இனிய குயிலே
கேட்டியேல் எங்கள் பெருமான்
பாத மிரண்டும் வினவில்
பாதாள மேழினுக் கப்பால்
சோதி மணிமுடி சொல்லிற்
சொல்லிறந் துநின்ற தொன்மை
ஆதி குணமொன்று மில்லான
அந்தமி லான்வரக் கூவாய்.
 
                      -மாணிக்கவாசகர்  (8-18-1)

 

பொருள்: இசை  உள்ள குயிலே! எம் பெருமான் திருவடி இரண்டும் எங்குள்ளன? எனக் கேட்டால், அவை கீழுலகம் ஏழினுக்கும் அப்பால் உள்ளன எனலாம். அவனது ஒளி பொருந்திய அழகிய திருமுடி எங்குளது? என்று சொல்லப்புகின், அது சொல்லின் அளவைக் கடந்து நின்ற பழமையுடையது எனப்படும். இவைகளைக் கேட்டாயாயின் முதலும் குணமும் இல்லாதவனும், முடிவு இல்லாதவனுமாகிய அவனை நீ இங்கு வரும்படி கூவி அழைப்பாயாக

No comments:

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...