25 November 2015

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

பொன்தரத் தாரு மென்று
புகன்றிட வணிகன் தானும்
என்தர விசைந்த தென்னத்
தாலியைக் கலயர் ஈந்தார்
அன்றவன் அதனை வாங்கி
அப்பொதி கொடுப்பக் கொண்டு
நின்றிலர் விரைந்து சென்றார்
நிறைந்தெழு களிப்பி னோடும்.
 
                  -குங்குலி கலயநாயனார்  (12)

 

 பொருள்: நான் பொன் தர நீர் இக்குங்குலியத்தைத் தாரும் என்றதும்  வணிகனும் அவரை நோக்கி, `எவ்வளவு பொன் இதற்குக் கொடுப்பீர்` என்ன, கலயனாரும் தம் மனைவியாரின் தாலியைக் கொடுத்தலும், அவ்வணிகன், அதனை வாங்கிக் கொண்டு அப்பொதியினைக் கொடுப்பக் கொண்டு, அங்கு நில்லாது தம் மனத்தில் நிறைந்து எழும் மகிழ்ச்சியோடு விரைந்து சென்றார்.

No comments:

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...