07 August 2015

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

புடைவை கிழிந்தது போயிற்று வாழ்க்கை
அடையப்பட் டார்களும் அன்பில ரானார்
கொடையில்லை கோளில்லை கொண்டாட்ட மில்லை
நடையில்லை நாட்டில் இயங்குகின் றார்கட்கே.
 
                               -திருமூலர்  (10-13-1)

 

பொருள்: உடுத்திருக்கும் ஆடை கிழிந்த ஆடையாய் இருந்ததென்றால், அவரது வாழ்க்கையும் கிழிந்தொழிந் ததேயாம். ஏனெனில், தம்மால் தமக்குத் துணையெனத் தெளியப்பட்ட வரும் தம்மாட்டு அன்பிலாராகின்றனர். எவரோடும் கொடுத்தல் கொள்ளல்கள் இல்லை; இல்லத்தில் யாதொரு கொண்டாட்டம்  இல்லை, பிற உலக நடையும் இல்லாமல் இயங்குகின்றனர்.

No comments:

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...