18 August 2015

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

இதற்கினி என்கண் அம்பால்
இடந்தப்பின் எந்தை யார்கண்
அதற்கிது மருந்தாய்ப் புண்ணீர்
நிற்கவும் அடுக்கு மென்று
மதர்த்தெழும் உள்ளத் தோடு
மகிழ்ந்துமுன் னிருந்து தங்கண்
முதற்சர மடுத்து வாங்கி
முதல்வர்தங் கண்ணில் அப்ப.

                   -கண்ணப்ப நாயனார் புரணாம்  (173)

 

பொருள்: இதற்கு இனி, எனது கண்ணை அம்பால் இடந்து எம்பிரானின் புண்ணுடைய கண்ணில் அப்பினால், அக்கண்ணிற்கு எனது இக்கண் மருந்தாகிக் குருதி நிற்கவும் கூடும் என்று உள்ளத்து எழுந்த அந்நினைவால், பெருமிதம் கொண்டு, மகிழ்ந்து, திண்ணனார் ஓர் அம்பினை எடுத்துத் தம் கண்ணினை இடந்து, கையிடத்துக் கொண்டு, தம் முதல்வராய காளத்தியப்பரின் கண்மீது அப்பிடலும்.

No comments:

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...