25 August 2015

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

பாறு தாங்கிய காட ரோபடு
தலைய ரோமலைப் பாவையோர்
கூறு தாங்கிய குழக ரோகுழைக்
காத ரோகுறுங் கோட்டிள
ஏறு தாங்கிய கொடிய ரோசுடு
பொடிய ரோஇலங் கும்பிறை
ஆறு தாங்கிய சடைய ரோநமக்
கடிக ளாகிய அடிகளே.
 
                      -சுந்தரர்  (7-33-1)

 

பொருள்: நம்  தலைவர் பருந்துகளைச் சுமக்கும் முதுகாட்டில் வாழ்பவரோ ? அழிந்த தலையை ஏந்தியவரோ ? மலைமகளது ஒருபாகத்தைச் சுமக்கும் அழகரோ ? குழையணிந்த காதினை உடையவரோ ? சிறிய கொம்பினையுடைய இளமையான இடபத்தைக் கொண்டுள்ள கொடியை உடையவரோ ? சுடப்பட்ட நீற்றை அணிந்தவரோ ? விளங்குகின்ற பிறையோடு ஆற்றைச் சுமந்த சடையை உடையவரோ ?  சொல்வீராக 

No comments:

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...