06 August 2014

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

கண்டவர் இதுமுன்பு அண்ணல்
உரித்தஅக் களிறே போலும்
அண்டரும் மண்ணு ளோரும்
தடுக்கினு மடர்த்துச் சிந்தத்
துண்டித்துக் கொல்வே னென்று
சுடர்மழு வலத்தில் வீசிக்
கொண்டெழுந் தார்த்துச் சென்று
காலினாற் குலுங்கப் பாய்ந்தார்.
 
                      - எறிபத்தநாயனார் புராணம் (23)
 
பொருள்:  யானையைக் கண்ட எறிபத்தர், இவ்யானை முன்பு சிவபெருமான் உரித்த அந்த யானை போன்றதாகும்; ஆயினும் விண்ணவரும் மண்ணவரும் வந்து தடுப்பினும் மேற்சென்று எதிர்த்துக் குருதி சிதறுமாறு வெட்டிக் கொன்றுவிடுவேன் என்று ஒளி பொருந் திய மழுவினை வலமாகத் திரித்து வீசிக் கொண்டு, மேலெழுந்து அவ்யானை குலுங்குமாறு பாய்ந்தார்.

No comments:

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...