18 August 2014

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

உலகா ளுறுவீர் தொழுமின்விண்
ணாள்வீர் பணிமின்நித்தம்
பலகா முறுவீர் நினைமின்
பரமனொ டொன்றலுற்றீர்
நலகா மலரால் அருச்சிமின்
நாள்நர கத்துநிற்கும்
அலகா முறுவீர் அரனடி
யாரை அலைமின்களே.
 
              - சேரமான்பெருமாள் நாயனார் (11-6-14)

 

பொருள்: மண்ணுலகத்தை ஆள விரும்புகின்றவர்களே,  சிவபெருமானைக் கைகுவித்துக் கும்பிடுங்கள். விண்ணுலகை ஆள விரும்புகின்றவர்களே, சிவபெருமானது திருவடிகளில் வீழ்ந்து பணியுங்கள். நாள்தோறும் பற்பலவற்றை விரும்புகின்றவர்களே சிவபெருமானை இடையறாது நினையுங்கள். சிவபெருமானோடு இரண்டறக் கலக்க விரும்புகின்றவர்களே, அப்பெருமானை நந்தவனத்தில் உள்ள நல்ல பல மலர்களால் அருச்சனை செய்யுங்கள். என்றும் நரகத்தில் நிற்றலாகிய பொல்லாத விளைவை விரும்புகின்றவர்களே,  சிவ பெருமானுடைய அடியாரை வருந்தப் பண்ணுங்கள்.

No comments:

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...