19 August 2014

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

வெட்டுண்டு பட்டு வீழ்ந்தார்
ஒழியமற் றுள்ளா ரோடி
மட்டவிழ் தொங்கல் மன்னன்
வாயிற்கா வலரை நோக்கிப்
பட்டவர்த் தனமும் பட்டுப்
பாகரும் பட்டா ரென்று
முட்டநீர் கடிது புக்கு
முதல்வனுக் குரையு மென்றார்.
 
                        - எரிபத்தனாயனார் புராணம் (26)

 

பொருள்: எறிபத்தரால் வெட்டுண்டு விழுந்தவர்  அல்லாமல் அங்கிருந்த வேறு சிலர், தேன் துளிக்கும் ஆத்தி மாலையை யணிந்த புகழ்ச்சோழநாயனாரின்அரண்மனைக்கு ஓடிச்சென்று, வாயில் காவலர்களைப் பார்த்து, பட்டத்து யானையும் இறந்து அதனைச் செலுத்தும் பாகரும் இறந் தார்கள் என்று, நீவிர் விரைவாகச் சென்று அரசருக்குத் தெரிவிப்பீராக என்று சொன்னார்கள்.

No comments:

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...