08 July 2014

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

வேதமும் வேள்வியும் ஆயி னார்க்கு
மெய்ம்மையும் பொய்ம்மையும் ஆயி னார்க்குச்
சோதியு மாய்இருள் ஆயி னார்க்குத்
துன்பமு மாய்இன்பம் ஆயி னார்க்குப்
பாதியு மாய்முற்றும் ஆயி னார்க்குப்
பந்தமு மாய்வீடும் ஆயி னாருக்
காதியும் அந்தமும் ஆயி னாருக்
காடப்பொற் சுண்ணம் இடித்தும் நாமே.
 
                - மாணிக்கவாசகர் (8-9-20)

 

பொருள்: வேதமும்  வேள்வியும்  ஆனவரும், மெய்ப்பொருளும் பொய்ப் பொருளும் ஆனவரும், ஒளியுமாகி, இருளும் ஆனவரும், துன்பமுமாகி இன்பமும் ஆனவ ரும், பாதியுமாகி முழுதுமானவரும், உயிர்களுக்குப் பந்தமும் ஆகி வீடும் ஆனவரும், உலகுக்கு முதலும் முடிவுமானவரும் ஆகிய இறைவருக்கு, நீராடும் பொருட்டுப் பொன்போலும் வாசனைப் பொடியை நாம் இடிப்போம்.

No comments:

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...