21 July 2014

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

என்றவ ருரைத்த மாற்றம்
எறிபத்தர் எதிரே வாரா
நின்றவர் கேளா மூளும்
நெருப்புயிர்த் தழன்று பொங்கி
மன்றவ ரடியார்க் கென்றும்
வழிப்பகை களிறே யன்றோ
கொன்றது வீழ்ப்ப னென்று
கொடுமழு எடுத்து வந்தார்.
 
         - எரிபத்தநயனார் புராணம் (20)

 

பொருள்: இவ்வாறு சிவகாமியாண்டார் முறையீடு செய்து கொண்டிருக்கும் சொற்களை அவர் எதிரில் வருகின்ற எறிபத்தர் கேட்டு, தன்னுள் மூளும் சினத்தீயோடு பெருமூச்சு விட்டு, மேலும் சினந்து, தில்லையில் கூத்தியற்றும் அடியவர்களுக்கு எந்நாளும் வழி வழியாகப் பகைமையாயுள்ளது யானையேயன்றோ? ஆதலால் அவ்யானையைக் கொன்று தரையில் வீழ்த்துவேன் என்று கொலை செய்தற்கு ஏது வாய கொடிய மழுப் படையை எடுத்துக் கொண்டு வந்தார்.

No comments:

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...