02 July 2014

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

வென்றிமால் யானை தன்னை
மேல்கொண்ட பாக ரோடும்
சென்றொரு தெருவின் முட்டிச்
சிவகாமி யார்முன் செல்ல
வன்தனித் தண்டில் தூங்கும்
மலர்கொள்பூங் கூடை தன்னைப்
பின்தொடர்ந் தோடிச் சென்று
பிடித்துடன் பறித்துச் சிந்த.
 
             - எறிபத்த நாயனார்  புராணம் (13)

 

பொருள்: வெற்றி பொருந்திய அப்பெரிய யானையானது தன் மீது இவர்ந்து வரும் பாகரோடும் சென்று, ஒரு தெருவில் அப்பாகர்களின் கட்டுக் கடங்காமல் தனக்கு முன் சென்று கொண்டிருக் கும் சிவகாமியாண்டாரைக் கண்ட அளவில், அவர்தம் வலிமை மிக்க ஒப்பற்ற தண்டில் தொங்குகின்ற மலர்கள் நிறைந்த திருப்பூங் கூடையை, அவர் பின் தொடர்ந்து ஓடிப் பற்றி, நிலத்தில் சிந்த.

No comments:

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...