28 May 2013

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

அன்னையே என்னேன் அத்தனே என்னேன்
அடிகளே யமையுமென் றிருந்தேன்
என்னையும் ஒருவன் உளனென்று கருதி
இறைஇறை திருவருள் காட்டார்
அன்னமாம் பொய்கை சூழ்தரு பாச்சி
லாச்சிரா மத்துறை அடிகள்
பின்னையே அடியார்க் கருள்செய்வ தாகில்
இவரலா தில்லையோ பிரானார்.
 
                 - சுந்தரர் (7-14-2)

 

பொருள்:  என்னைப் பெற்ற தாயைத்,  தந்தையைத் துணையென்று நினைந்திலேன்,   என்னை ஆண்ட தலைவனே துணை  என்று நினைத்தேன் . இவ்வாறு ஒருவன் உளன்  என்று , தம் சீரடியாரை நினைத்தற்கிடையில் , அன்னங்கள் மிக்கு வாழும் பொய்கை சூழ்ந்த திருப்பாச்சிலாச் சிராமத்தில் எழுந்தருளியுள்ள இறைவர் என்னையும் சிறிது திரு வுள்ளத்தடைத்து , சிறிது திருவருளைப் புலப்படுத்திலர் . இவர் தம் அடியவர்க்கு , மறுமை நலம் ஒன்றையே அளித்தலல்லது , இம்மை நலத்தை அருளுவதில்லையாயினும் . இம்மையில் அடியேனைப் புரக்கும் தலைவர் இவரன்றி வேறொருவர் இல்லை.

No comments:

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...