27 May 2013

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

ஒன்றுகொ லாமவர் சிந்தை யுயர்வரை
ஒன்றுகொ லாமுய ரும்மதி சூடுவர்
ஒன்றுகொ லாமிடு வெண்டலை கையது
ஒன்றுகொ லாமவ ரூர்வது தானே.

              - திருநாவுக்கரசர் (4-18-1)

பொருள்: இப்பாடல் விடம் தீர்க்கும் திருப்பதிகம் ஆகும். சிவபெருமானுடைய  உள்ளத்தைப்போல உயர்ந்த கயிலை மலையும், அவர் சூடும் உயர்ந்த பிறையும் அவர் பிச்சை எடுக்குமாறு கையில் ஏந்திய மண்டையோடும், அவர் இவரும் காளையும் எண்ணிக்கையில் ஒன்று ஒன்றே ஆகும்.

No comments:

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...