16 May 2013

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

அடற்கரி போல்ஐம் புலன்களுக் கஞ்சி
அழிந்தஎன்னை
விடற்கரி யாய்விட் டிடுதிகண் டாய்விழுத்
தொண்டர்க்கல்லால்
தொடற்கரி யாய்சுடர் மாமணி யேசுடு
தீச்சுழலக்
கடற்கரி தாய்எழு நஞ்சமு தாக்குங்
கறைக்கண்டனே.
      
           - மாணிக்கவாசகர் (8-6-32)

 

பொருள்:  அடியார்களுக்கு இல்லாமல்  ஏனை யோர்க்குப் பற்றுதற்கு அருமையானவனே! ஒளி விளங்கும் பெரிய மாணிக்கமே! சுடும் தீயாகிய ஒரு பூதமும் நிலைகலங்க, கடலின் கண்  உண்டாகிய நஞ்சை அமுதாக்கிய நீலகண்டப் பெருமானே! விடுதற்கு அருமையானவனே! வலி பொருந்திய யானையைப் போன்ற ஐம்புல ஆசைக்குப் பயந்து உள்ளம் ஒடுங்கிய என்னை விட்டு விடுவாயோ?

No comments:

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...