28 August 2018

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை


வருட்டின் திகைக்கும் வசிக்கின்
துளங்கும் மனமகிழ்ந்து
தெருட்டின் தெளியலள் செப்பும்
வகையில்லை சீரருக்கன்
குருட்டிற் புகச்செற்ற கோன்புலி
யூர்குறு கார்மனம்போன்
றிருட்டிற் புரிகுழ லாட்கெங்ங
னேசொல்லி யேகுவனே.

            -திருக்கோவையார்  (8-18,5)


பொருள்: வசிக்கின் துளங்கும் இன்சொல்லின் வசித்து ஒன்று சொல்லலுறுவேனாயின் அக்குறிப் பறிந்து உண்ணடுங்காநிற்கும்;  செப்பும் வகை இல்லை இவ்வாறொழிய அறிவிக்கும் வகை வேறில்லை; அதனான், புரி குழலாட்கு எங்ஙன் சொல்லி ஏகுவன் சுருண்ட குழலை யுடையாட்குப் பிரிவை எவ் வண்ணஞ் சொல்லிப் போவேன்! ஒருவாற்றானுமரிது எ - று.

No comments:

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...