16 August 2018

தினம் ஒரு திருமுறை


தினம் ஒரு திருமுறை


தந்தை தாய்உல குக்கோர்
தத்துவன் மெய்த்தவத் தோர்க்குப்
பந்த மாயின பெருமான்
பரிசுடை யவர்திரு வடிகள்
அந்தண் பூம்புனல் ஆனைக்
காவுடை ஆதியை நாளும்
எந்தை என்றடி சேர்வார்
எம்மையும் ஆளுடை யாரே

          - சுந்தரர் (7-75-4)

 

பொருள்: உலகம் எல்லாவற்றிற்கும் தந்தையாய் , ஒப்பற்ற மெய்ப்பொருளாய் உள்ளவனும் , உண்மையான தவத்தைச் செய் வோர்க்கு உறவான பெருமானும் , அன்புடையவர்க்குச் சிறந்த தலைவனும் ஆகிய , அழகிய , குளிர்ந்த பூக்களையுடைய , நீரையுடைய திருவானைக்காவைத் தனதாக உடைய முதல்வனை , ` இவனே எம் தந்தை ` என்று அறிந்து , நாள்தோறும் அடிபணிகின்றவர் , எம்மையும் அடிமைகொண்டு ஆளுதலுடையவராவர்

No comments:

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...