26 September 2016

தினம் ஒரு திருமுறை

தினம்  ஒரு திருமுறை


முன்புபோல் முதல்வ னாரை
அமுதுசெய் விக்க மூளும்
அன்புபோல் தூய செந்நெல்
அரிசிமா வடுமென் கீரை
துன்புபோம் மனத்துத் தொண்டர்
கூடையிற் சுமந்து போகப்
பின்புபோம் மனைவி யார்ஆன்
பெற்றஅஞ் சேந்திச் சென்றார்.

                    -அரிவாட்டாயநாயனார்  (14) 


பொருள்: அத்தகைய வறுமையிலும், முன்புபோல முதல்வ னாரை அமுது செய்விக்கத் தம்மிடத்து மூளுகின்ற அன்பு போலவே தூயதான செந்நெல்லின் அரிசியையும், மாவடுவையும், மென்மை யான செங்கீரையையும், துன்பம் நீங்கிய மனத்தையுடைய தொண் டர், தமது கூடையில் சுமந்து போக, அவர்பின்பு செல்லும் மனைவி யார் திருமுழுக்காட்டுதற்குரிய ஆனைந்தையும் மட்கலத்தில் தமது கையில் கொண்டு சென்றார்.

No comments:

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...