14 September 2016

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை


புற்று மாய்மர மாய்ப்புனல் காலே
உண்டி யாய்அண்ட வாணரும் பிறரும்
வற்றி யாரும்நின் மலரடி காணா
மன்ன என்னையோர் வார்த்தையுட் படுத்துப்
பற்றினாய் பதையேன் மனம்மிக உருகேன்
பரிகி லேன்பரி யாவுடல் தன்னைச்
செற்றி லேன்இன்னுந் திரிதரு கின்றேன்
திருப்பெ ருந்துறை மேவிய சிவனே.

                            -மாணிக்கவாசகர் (8-23-2) 


பொருள்:  எல்லோரும் புற்று வளரப் பெற்றும் மரம் வளரப் பெற்றும், நீரும் காற்றுமே உணவாக அமைய மெலிந்து வாழும் அவருள் ஒருவரும் உன் தாமரை மலர் போலும் திருவடிகளைக் காணமுடியாத அரசனே! அடியேனை ஒரு சொல்லில் அகப்படுத்தி ஆட்கொண்டாய். இருந்தும், நெஞ்சம் துடிக்கமாட்டேன்; மனம் மிகவும் உருகமாட்டேன்; உன்னிடம் அன்பு செய்யமாட்டேன்; திருப்பெருந்துறையில் இருக்கும் பெருமானே இன்னும் உலகில் அலைந்து கொண்டிருக்கின்றேன் !

No comments:

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...