11 July 2016

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை


எடுத்தன னெழிற் கயிலை யிலங்கையர் மன்னன் றன்னை
அடுத்தொரு விரலா லூன்ற வலறிப்போ யவனும் வீழ்ந்து
விடுத்தனன் கைந்ந ரம்பால் வேதகீ தங்கள் பாடக்
கொடுத்தனர் கொற்ற வாணாள் குறுக்கைவீ ரட்ட னாரே.

                       -திருநாவுக்கரசர்  (4-49-10)


பொருள்: கயிலைமலையைப் பெயர்க்க முற்பட்ட இலங்கையின் மன்னனாகிய இராவணனைப் பொருந்திய கால் விரலால் அழுத்திய அளவில் அலறிப் போய் அவன் செயலற்று விழுந்து , செருக்கினை விடுத்துக் கை நரம்புகளை வீணை நரம்புகள் ஆக்கி ஒலித்து வேத கீதங்களைப் பாட , அவனுக்கு வெற்றியைத் தரும் வாளினையும் நீண்ட ஆயுளையும் நல்கினார் குறுக்கை வீரட்டனார் .

No comments:

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...