01 July 2016

தினம் ஒரு திருமுறை

தினம்  ஒரு திருமுறை


முன்னின் றாண்டாய் எனைமுன்னம்
யானும் அதுவே முயல்வுற்றுப்
பின்னின் றேவல் செய்கின்றேன்
பிற்பட் டொழிந்தேன் பெம்மானே
என்னின் றருளி வரநின்று
போந்தி டென்னா விடில்அடியார்
உன்னின் றிவனார் என்னாரோ
பொன்னம் பலக்கூத் துகந்தானே.

                   -மாணிக்கவாசகர்  (8-21-2)


பொருள்: பொற்சபையில் திருநடனம் செய்வதை விரும்பி யவனே! பெருமானே! முன்னே, என் எதிரே தோன்றி ஆட்கொண் டாய். நானும் அதன் பொருட்டாகவே முயன்று உன்வழியில் நின்று பணி செய்கின்றேன். ஆயினும் பின்னடைந்து விட்டேன். என்னை இன்று உன்பால் வரும்படி அருளி, `வா` என்று அழையாவிடில் அடிய வர் உன்னிடத்தில் நின்று, இவர் யார் என்று கேட்க மாட்டார்களோ?

No comments:

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...