06 January 2015

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

போன அதிசூரன்
போரி லவர்க்கழிந்த
மானம்மிக மீதூர
மண்டுபடுவான் கண்படான்
ஆனசெயல் ஓரிரவும்
சிந்தித் தலமருவான்
ஈனமிகு வஞ்சனையால்
வெல்வனென எண்ணினான்.
 
              - ஏனாதி நாயனார் புராணம் (30)

 

பொருள்: புறமுதுகிட்டு ஓடிய அதிசூரன் போர்க் களத்தில் அவ்வடியவர்க்கு ஆற்றாது, அழிந்த மானம் பெரிதும் மீதூரத் படுத்தவன், உறங்காதவனாய்த் தனக்கு நேர்ந்த செயலை எண்ணி எண்ணி அந்த ஓர் இரவு முழுதும் சிந்தித்துத் துன்புறு கின்றவன், குறைபாடு மிகுந்த வஞ்சனைச் செயலால் அவ்வடியவரை வெல்வேன் என்று எண்ணினான்.

No comments:

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...