21 January 2015

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

வெண்ணீறு நெற்றி
விரவப் புறம்பூசி
உண்ணெஞ்சில் வஞ்சக்
கறுப்பும் உடன்கொண்டு
வண்ணச் சுடர்வாள்
மணிப்பலகை கைக்கொண்டு
புண்ணியப்போர் வீரர்க்குச்
சொன்னவி டம்புகுந்தான்.
 
               - ஏனாதி  நாயனார்  புரணாம் (35)

 

பொருள்: திருவெண்ணீற்றைத்தன் நெற்றி முழுதும் பொருந்துமாறு புறத்தே பூசி, நெஞ்சில் வஞ்சனையாகிய கறுப்பையும் உடன் கொண்டு, அழகிய ஒளி பொருந்திய வாளினையும் மணிக ளால் இழைக்கப் பெற்ற பலகையையும் கைகளில் கொண்டு, புண் ணியத்தன்மை வாய்ந்த போர் வீரராம் ஏனாதிநாதர் முன், தான் சொல் லிவிட்ட அவ்விடத்திற்குச் சென்றான்

No comments:

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...