28 February 2014

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

கரியரே இடந்தான் செய்யரே யொருபால்
கழுத்தில்ஓர் தனிவடம் சேர்த்தி
முரிவரே முனிவர் தம்மொடால் நிழற்கீழ்
முறைதெரிந் தோருடம் பினராம்
இருவரே முக்கண் நாற்பெருந் தடந்தோள்
இறைவரே மறைகளுந் தேட
அரியரே ஆகில் அவரிடம் களந்தை
அணிதிகழ் ஆதித்தேச் சரமே.
 
                  - கருவூர்த்தேவர் (9-9-3)

 

பொருள்: இடப் பகுதி கருநிறத்தவர். மற்றபகுதி செந்நிறத்தவர். கழுத்தில் ஒப்பற்ற எலும்புமாலையைச்சூடிக் கூத்து நிகழ்த்துபவர். சனகர் முதலிய முனிவர்களோடு கல்லால மரநிழலிலிருந்து நூலை ஆராய்பவர். ஒரே உடம்பில் ஆணும் பெண்ணுமாகிய இருவராய் இருக்கின்றவர். மூன்று கண்களையும் நான்கு தோள்களையும் உடைய இறைவர். வேதங்களும் தேடி அவரை உள்ளவாறு அறிய இயலாதவர். இவை எல்லாம் உண்மையாதல் போல அவர் உறைவிடம் களத்தூரிலுள்ள அணிதிகழ் ஆதித்தேச்சரம் ஆகும்.
 

No comments:

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...