24 January 2014

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

கலைகடம் பொருளும் அறிவுமாய் என்னைக்
கற்பினிற் பெற்றெடுத் தெனக்கே
முலைகடந் தருளுந் தாயினும் நல்ல
முக்கணான் உறைவிடம் போலும்
மலைகுடைந் தனைய நெடுநிலை மாட
மருங்கெலாம் மறையவர் முறையோத்
தலைகடல் முழங்கும் அந்தண்நீர்க் களந்தை
அணிதிகழ் ஆதித்தேச் சரமே.
 
                 - கருவூர் தேவர் (9-9-1)

 

பொருள்: கலைகளுடைய பொருள்களும், அக்கலைகளை இயல்பாகவே அறிந்த அறிவுமாய், கற்புக்கடம் பூண்ட நெறியானே என்னைப் பெற்று எனக்கே முலைப்பால் தந்து உதவுகின்ற தாயை விடத் தயையுடையவனாகிய முக்கண்களை உடைய சிவபெருமான் உகந்தருளியிருக்கும் இடம், மலைகளைக் குடைந்து அமைத்தாற் போன்ற பலமாடிகளை உடைய மாட வீடுகளிலெல்லாம் வேதியர்கள் முறையாக ஓதும் வேதத்து ஒலி நீரை அலைக்கும் கடல் ஒலிபோல ஒலிக்கும் அழகிய குளிர்ந்த நீர் வளம் உடைய களத்தூரிலுள்ள அழகு விளங்கும் திருக்கோயிலாகிய ஆதித்தேச்சரமே.

No comments:

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...