21 June 2013

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

மங்கலம் பெருக மற்றென்
வாழ்வுவந் தணைந்த தென்ன
இங்கெழுந் தருளப் பெற்ற
தென்கொலோ என்று கூற
உங்கள்நா யகனார் முன்னம்
உரைத்த ஆகம நூல் மண்மேல்
எங்குமில் லாத தொன்று
கொடுவந்தேன் இயம்ப வென்றான்.
 
      -மெய்ப்பொருள் நாயனார் புராணம் (12)

          

பொருள்: மங்கலம் பெருக என்வாழ்வே சிறக்க வந்தாற்போல, இவ்விடத்திற்கு எழுந்தருளப் பெற்றது எதனால் ?` என்று மெய்ப்பொருளார் வினவ, முத்தநாதன், உங்கள் தலைவர் முற்காலத்தே அருளிச் செய்த சைவ ஆகம நூல்களுள் உலகில் வேறு எங்கும் கிடைத்திராத அரியதொரு நூலைக் கொண்டு வந்தேன் என்றான்.
 

No comments:

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...