12 June 2013

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

மலைபல வளர்தரு புவியிடை மறைதரு வழிமலி மனிதர்கள்
நிலைமலி சுரர்முதல் உலகுகள் நிலைபெறு வகைநினை வொடுமிகும்
அலைகடல் நடுவறி துயிலமர் அரியுரு வியல்பர னுறைபதி
சிலைமலி மதிள்சிவ புரம்நினை பவர்திரு மகளொடு திகழ்வரே.

            - திருஞானசம்பந்தர் (1-21-2)

பொருள்: பெரிய மலைகள் சூழந்த மனிதர்கள் முதல் தேவர் வரை வாழும் உலகங்கள் நிலைபெற, அலைகடலில் துயில் கொள்ளும் அரி வந்து வணங்கும் சிவபுரம் உள்ள சிவனை உள்ளன்போடு 
நினைபவர்களிடம் திருமகள்  (செல்வம்) வந்து சேரும். 

No comments:

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...