17 December 2016

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை


குளங்கள்பல வுங்குழி யுந்நிறையக்
குடமாமணி சந்தன மும்மகிலும்
துளங்கும்புன லுட்பெய்து கொண்டுமண்டித்
திளைத்தெற்றுசிற் றாறதன் கீழ்க்கரைமேல்
வளங்கொள்மதில் மாளிகை கோபுரமும்
மணிமண்டப மும்மிவை மஞ்சுதன்னுள்
விளங்கும்மதி தோய்வெஞ்ச மாக்கூடல்
விகிர்தாஅடி யேனையும் வேண்டுதியே.

                      - சுந்தரர் (7-42-2)


பொருள்: குளங்களும் , குழிகளும் நிறையும்படி , மேற்குத் திசையில் உள்ள சிறந்த மணிகளையும் ,  சந்தனமரம் , அகில் மரம்  இவற்றையும் , அசைகின்ற நீருள் இட்டுக்கொண்டு , கரையை நெருங்கிப் பொருந்தி மோதுகின்ற சிற்றாற்றின் கீழ்க்கரை மேல் உள்ள , வளத்தைக்கொண்ட மதிலும் , மாளிகையும் கோபுரமும் , மணிமண்டபமும் ஆகிய இவை . மேகத்தில் விளங்குகின்ற சந்திரனை அளாவுகின்ற திருவெஞ்சமாக்கூடலில் எழுந்தருளியிருக்கின்ற வேறுபட்ட இயல்பை உடையவனே , அடியேனையும் உன் சீரடியாருள் ஒருவனாக வைத்து விரும்பியருள் .

No comments:

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...