17 August 2016

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை


மின்னு செஞ்சடை வேதியர்க் காமென்று
செந்நெல் இன்னமு தோடுசெங் கீரையும்
மன்னு பைந்துணர் மாவடு வுங்கொணர்ந்
தன்ன வென்றும் அமுதுசெய் விப்பரால்.

                   -அரிவாட்டாயநாயனார்  (6) 


பொருள்: அவர், விளங்குகின்ற செஞ்சடையை உடைய அறவாழி அந்தணராய சிவபெருமானுக்கு ஆகும் என்று, நாளும் செந்நெல்லின் இனிய உணவுடன் செங்கீரையும் சிறந்த கொத்தாக விளங்கும் மாவடுவையும் கொணர்ந்து, அவற்றைப் பெருமானுக்கு அமுது செய்வித்து வருவார்.

No comments:

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...