18 May 2016

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை


திண்டிற லரக்க னோடிச் சீகயி லாயந் தன்னை
எண்டிற லிலனு மாகி யெடுத்தலு மேழை யஞ்ச
விண்டிறல் நெரிய வூன்றி மிகக்கடுத் தலறி வீழப்
பண்டிறல் கேட் டுகந்த பரமராப் பாடி யாரே.

                      -திருநாவுக்கரசர்  (4-48-10)


பொருள்: இராவணன் எம் பெருமானைப் பற்றி எண்ணியறியும் அறிவு வலிமை இல்லாதவனாய்ப் பெருமைமிக்க கயிலாய மலையைப் பெயர்க்க முற்பட்ட அளவில் பார்வதி பயப்பட , அவன் உடல் வலிமை நீங்குமளவுக்கு அவன் உடல் நெரியுமாறு மிகவும் வெகுண்டு விரலை ஊன்ற அவன் அலறிவிழப் பின் அவன் பாடிய பண்களையும் அவற்றின் திறங்களையும் கேட்டுகந்த பெருமான் திருஆப்பாடியார் ஆவார் .

No comments:

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...